திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இயங்கி வரும் ஆண்டவர் டீ ஸ்டால் என்கிற தேநீர் கடையில் விற்கப்படும் தேநீரின் சுவை மாறுவதாகவும் மேலும் கசப்பு தன்மையுடன் இருப்பதாகவும்,இந்த கடையில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவதாகவும் திருவாரூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு வந்த புகார் வந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் இந்த கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இந்த கடையில் பயன்படுத்தப்பட்ட டீத்துளின் தரத்தை அறிந்து கொள்வதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குளிர்ந்த நீரில் டீத்தூளை போட்டு பரிசோதித்தனர்.
இதில் நீரில் அதிக சாயம் இறங்கியது. மேலும் இந்த தேநீர் கடையில் நிறத்திற்காக இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் டீத்தூளை கலந்து பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்தது. மேலும் தேனீர் கடை நடத்துவதற்கான உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து அந்த தேநீர் கடையில் பயன்படுத்தப்பட்ட டீத்தூளின் மாதிரிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். உரிய சோதனை நடத்தப்பட்ட பின்பு கலப்பட தூள் பயன்படுத்தியது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.