கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 2 கிராம மக்கள் அவதி : புகை மண்டலத்தில் சிக்கிய TOURIST!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும் .தற்போது கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வந்த நிலையில் இன்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் 100 ஏக்கர் பரப்புக்கு மேலாக உள்ள இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
நேற்று துவங்கிய காட்டுத் தீ இன்று மளமளவென பரவி எரிந்து வருகிறது. தொடர்ந்து எரிந்து வரக்கூடிய காட்டுத்தீயின் காரணமாக புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.
மேல்மலை கிராமங்களில் உள்ள வனப் பகுதிகள் மேலும் வனப்பகுதியில் இருக்கக்கூடிய வன விலங்குகளும் இந்தப் பகுதியை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!!
இருந்தாலும் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடிய வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது. மேலும் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கடும் புகை மண்டலத்தால் புகைமண்டலம் சூழ்ந்தவாறு சாலைகளை கடக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.