Categories: தமிழகம்

உஷார் மக்களே உங்களுக்கும் இந்த SMS வரலாம் : ஆஃபர் என கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்… பாதித்த சாலையோர உணவக உரிமையாளர் வேண்டுகோள்!!

திருப்பூர் : ஆஃபர் விலையில் ஆன்லைனில் செல்போன் தருவதாக கூறி சாலையோர உணவக உரிமையாளருக்கு ஹேர் டிரையரை அனுப்பி வைத்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). தனது மனைவியுடன் சாலையோர உணவகம் நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் பேசிய வித்யா என்ற பெண் உங்களது செல்போன் எண்ணுக்கு புதிய ஆஃபர் ஒன்று அறிமுகம் செய்வதாகவும் அதன்படி விலை உயர்ந்த ஓப்போ ஏ 12 என்ற செல்போன் ஆப்பர் விலையில் ரூ.2500ஐ அருகில் உள்ள தபால் நிலையத்தில் செலுத்தினால் பெற்றுக் கொள்ளலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து சுமார் 25,000 மதிப்புள்ள அந்த மாடல் செல்போன் தனது மகளின் இணையதள கல்விக்கு பயன்படும் என்று நினைத்த கண்ணன் தனக்கு செல்போன் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார்.

இதனை அடுத்து பல்லடம் தபால் நிலையத்திலிருந்து அழைத்த ஊழியர் ஒருவர் உங்களுக்கு பார்சல் வந்திருக்கிறது என்று கூறியதையடுத்து அங்கு சென்ற கண்ணன் ரூ.2500 பணத்தை கொடுத்து அவரது மனைவி பெயருக்கு வந்திருந்த பார்சலை வாங்கி வந்துள்ளார்.

வீட்டில் வந்து அதனை பிரித்துப் பார்த்து அவரும் அவரது மனைவியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த பார்சலில் விலை உயர்ந்த செல்போனுக்கு பதிலாக தலை முடியின் ஈரப்பதத்தை காய வைக்கும் டிரையர் மெஷின் அதனுடன் பவர் பேங்க் என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த ஒரு டப்பாவில் இருந்து எறும்பு கொல்லி மருந்து துகள்கள் விழுந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் நொந்து போயினர். இதனை அடுத்து ரூ. 2500 பணத்தை பெற்றுக் கொண்டு விலையை உயர்ந்த செல்போனுக்கு பதிலாக ஹேர் டிரையர் மற்றும் எலும்புக் கொல்லி மருந்துடன் கூடிய பவர் பேங்க் பெட்டி ஆகியவற்றுடன் தங்களை மோசடி செய்த ஆன்லைன் கும்பல் மீது பல்லடம் போலீசில் கண்ணன் புகார் அளித்துள்ளார்.

பல்லடத்தில் ஆன்லைன் மூலம் ஆஃபரில் குறைந்த விலையில் விலை உயர்ந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஆன்லைன் கும்பல் மீது எழுந்துள்ள புகார் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

3 minutes ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

1 hour ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

2 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

3 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

4 hours ago

பட்டியலின இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீஸார்; 6 மாதம் முன்பு நடந்த சிசிடிவி வீடியோ!

திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago

This website uses cookies.