தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்ந்திருக்கும் வேளையில் ஒர்க் ஷாப் உரிமையாளர் ஒருவர் பொது நலனுடன் பேட்டரி வண்டிக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என பேனர் அடித்து கடையின் முன் வைத்திருப்பது பொது மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் அம்மன் ஆட்டோ இன்ஜினியரிங் என்ற ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவர் வாங்கிய எலக்ட்ரிக் பைக்கில் வெளியூர் சென்று விட்டு வரும்பொழுது எதிர்பாராத விதமாக பைக்கில் சார்ஜ் குறைந்ததால் அருகே உள்ள கடையில் தயக்கத்துடன் கேட்டு சார்ஜ் போட்டதாகவும் கடைக்காரர் தன்னை சலித்துக் கொண்டு பார்த்ததாகவும் செந்தில்குமாரிடம் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட அவர் எலக்ட்ரிக் பைக்கில் செல்லும்போது சார்ஜ் இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தன்னுடைய ஒர்க் ஷாப் முன்பு இலவசமாக எலக்ட்ரிக் பைக்குக்கு சார்ஜ் போட்டு தரப்படும் என்ற அறிவிப்பு பேனரை கடையின் முன்பு வைத்துள்ளார்.
தற்போது மின்சார கட்டணம் தமிழகத்தில் அதிகரித்துள்ள இவ்வேளையிலும் மக்களின் பொது நலன் கருதி உதவி செய்யும் நோக்கோடு இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பை கண்ட அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்..
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.