ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி பழுதடைந்து நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.
கடந்த மாதம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை பண்ணாரி சோதனைசாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியிலும் வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு காலை 6 மணிக்கு திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்படுகிறது.
இதனால் திம்பம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியிலிருந்து மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக லாரி பழுதடைந்து நின்றது.
இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலக் இடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.