Categories: தமிழகம்

நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயற்சி…தனிப்படை போலீசார் எனக்கூறி மர்மகும்பல் துணிகரம்: விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்…!!

சென்னை: புழல் காவல் நிலையம் அருகே நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் கூலிப்படையை ஏவி கடத்த முயன்றனரா அல்லது பணம் பறிக்க கடத்த முயன்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் முகப்பேர் ஜெ.ஜெ.நகரில் இவருக்கு சொந்தமாக 3 நகை கடை மும்பை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதியில் இயங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் 36 அடகுக் கடைகளும் இயங்கி வருகிறது.

ஏ.ஆர்.டி.நகை கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர் நேற்று காலை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகில் நகைக்கடையின் புதிய அடகு கடை கிளையை திறந்து வைத்து விட்டு விழா முடிந்து T.N.10 .BB.100 எண் கொண்ட பென்ஸ் காரில் திருப்பதியில் இருந்து சென்னையை நோக்கி வந்தடையும் போது புழல் காவல் நிலையம், BVK திருமணம் மண்டபம் அருகில் ஜி.என்.டி.சாலையில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களான 7 பேர் கொண்ட கும்பல் திடீரென நகைக்கடை உரிமையாளரின் காரை வழிமறித்துள்ளனர்.

மேலும், தங்களை கொருக்குப்பேட்டை தனிப்படை போலீசார் என கூறி நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோனை கைது செய்ய பிடிவாரண்ட் உள்ளதாக கூறி வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது இருசக்கர வாகனத்தில் வருமாறு அழைத்ததாகவும், இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் மேற்படி புழல் சைக்கிள் ஷாப் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் காரில் இருந்த மற்ற 4 தனிப்படை போலீஸார் காரின் உள்ளே அமர்ந்து கொண்டு காரை எடுக்க முயற்சி செய்த நிலையில் காரை எடுக்க முடியாமல் போனதால் பின்னர் முன்பு பங்கில் நின்று கொண்ட இருந்த மற்றொரு தனிப்படை காவலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது காரின் உரிமையாளர் காரில் சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டதால் காரை இயக்க முடியவில்லை.

பின்பு சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நிலையில்
சம்பவ இடத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஆனந்த் குமார் என்பவர் வந்து விசாரணை செய்யும் போது காவலரிடம் தன்னை தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆனால் பேச்சில் சந்தேகம் இருந்தால் உடனே சுதாரித்துக் கொண்ட தலைமை காவலர் இருதரப்பினரையும் அருகில் உள்ள புழல் காவல் நிலையத்திற்கு வர கூறி அழைத்து வந்ததாகவும் அதில் நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் தரப்பினர் மட்டும் புழல் காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்ததனிப்படை போலீசார் எனக் கூறிய 7 பேரும் ஜி என் டி பிரதான சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் இறங்கி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு புழல் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் தரப்பினர் தன்னை கடத்த முயற்சி செய்து உள்ளதாக புகார் அளித்ததன் பேரில் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்கில் வந்த 7 மர்ம நபர்கள் யார் ஏன் தனிப்படை போலீசார் என கூறி நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயற்சி செய்தனர் என பல கோலத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் கூலிப்படையை ஏவி கடத்த முயன்றனரா அல்லது பணம் பறிக்க கடத்த முயன்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.