Categories: தமிழகம்

நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயற்சி…தனிப்படை போலீசார் எனக்கூறி மர்மகும்பல் துணிகரம்: விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்…!!

சென்னை: புழல் காவல் நிலையம் அருகே நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் கூலிப்படையை ஏவி கடத்த முயன்றனரா அல்லது பணம் பறிக்க கடத்த முயன்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் முகப்பேர் ஜெ.ஜெ.நகரில் இவருக்கு சொந்தமாக 3 நகை கடை மும்பை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதியில் இயங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் 36 அடகுக் கடைகளும் இயங்கி வருகிறது.

ஏ.ஆர்.டி.நகை கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர் நேற்று காலை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகில் நகைக்கடையின் புதிய அடகு கடை கிளையை திறந்து வைத்து விட்டு விழா முடிந்து T.N.10 .BB.100 எண் கொண்ட பென்ஸ் காரில் திருப்பதியில் இருந்து சென்னையை நோக்கி வந்தடையும் போது புழல் காவல் நிலையம், BVK திருமணம் மண்டபம் அருகில் ஜி.என்.டி.சாலையில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களான 7 பேர் கொண்ட கும்பல் திடீரென நகைக்கடை உரிமையாளரின் காரை வழிமறித்துள்ளனர்.

மேலும், தங்களை கொருக்குப்பேட்டை தனிப்படை போலீசார் என கூறி நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோனை கைது செய்ய பிடிவாரண்ட் உள்ளதாக கூறி வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது இருசக்கர வாகனத்தில் வருமாறு அழைத்ததாகவும், இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் மேற்படி புழல் சைக்கிள் ஷாப் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் காரில் இருந்த மற்ற 4 தனிப்படை போலீஸார் காரின் உள்ளே அமர்ந்து கொண்டு காரை எடுக்க முயற்சி செய்த நிலையில் காரை எடுக்க முடியாமல் போனதால் பின்னர் முன்பு பங்கில் நின்று கொண்ட இருந்த மற்றொரு தனிப்படை காவலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது காரின் உரிமையாளர் காரில் சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டதால் காரை இயக்க முடியவில்லை.

பின்பு சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நிலையில்
சம்பவ இடத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஆனந்த் குமார் என்பவர் வந்து விசாரணை செய்யும் போது காவலரிடம் தன்னை தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆனால் பேச்சில் சந்தேகம் இருந்தால் உடனே சுதாரித்துக் கொண்ட தலைமை காவலர் இருதரப்பினரையும் அருகில் உள்ள புழல் காவல் நிலையத்திற்கு வர கூறி அழைத்து வந்ததாகவும் அதில் நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் தரப்பினர் மட்டும் புழல் காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்ததனிப்படை போலீசார் எனக் கூறிய 7 பேரும் ஜி என் டி பிரதான சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் இறங்கி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு புழல் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் தரப்பினர் தன்னை கடத்த முயற்சி செய்து உள்ளதாக புகார் அளித்ததன் பேரில் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்கில் வந்த 7 மர்ம நபர்கள் யார் ஏன் தனிப்படை போலீசார் என கூறி நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயற்சி செய்தனர் என பல கோலத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் கூலிப்படையை ஏவி கடத்த முயன்றனரா அல்லது பணம் பறிக்க கடத்த முயன்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- வானவில்லா நீ? நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

20 minutes ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

3 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

3 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

4 hours ago

This website uses cookies.