Categories: தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா பயிர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது : டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு வருகை தந்தார்.

பின்னர் அலுவலகத்தில் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் கொள்ளை வழக்கு, செல்போன் திருட்டு போன்ற வழக்கில் குற்றவாளிகள் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பணம் நகைகள் செல்போன்கள் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் என 68 பேருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் :- திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கொள்ளை போன வழக்கில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு காவல்துறையினர் சென்று வெளிநாட்டு குற்றவாளி உட்பட ஏராளமான குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் என ஒரு கோடி 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த காலங்களில் அதிக அளவில் கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது காவல் துறையினரின் துரித நடவடிக்கையின் காரணமாக கஞ்சா செடி பயிர் செய்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒரிசா மற்றும் ஆந்திராவிலிருந்து கஞ்சா விற்பனைக்காக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் தேனி மாவட்டத்திலும் 80 சதவீதகத்திற்கும் மேல் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக கஞ்சா பயன்படுத்தி வந்தவர்களில் ஒரு சிலர் மருந்து கடையில் மருந்து, மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுப்பதற்கான கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதை போதை பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் போதை பொருள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

18 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

22 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

42 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

55 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.