Categories: தமிழகம்

பெங்களூருவில் இருந்து BMW கார் வாங்கி கஞ்சா கடத்தல் : தொழிலதிபர் போல் உலா வந்த வியாபாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாரை நம்புவது எதை நம்புவது என்று தெரியாத அளவில் குற்றங்கள் வினோதமாக நடக்கின்றன. அந்த வகையில் மேம்பாலத்துக்கு அடியிலும் செடு புதர் மண்டிய இடங்களிலும் காலி கிரவுண்டுகளிலும் விற்க்கப்பட்ட கஞ்சா தற்ப்போது சொகுசு காரில் விற்க்கின்றனர்.

போதை பொருளை விற்ப்பனையை தடுக்க காவல் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர். அந்த வகையில் கோவையில் கஞ்சா விற்ப்போரின் கைது எண்ணிக்கை உயரவே கடும் நடவடிக்கை தொடர்ந்திருக்கின்றன.

கோவை சாய்பாபா காலனி மார்கெட் பகுதிகளில் கஞ்சா விற்ப்பதாக போலிஸுக்கு தகவக் வந்திருக்கின்றது. சாய்பாபா காலனி காவல் ஆய்வாளர் தமிழ் தலைமையிலான போலீசார் ரகசியமாக ரோந்து சென்றிருக்கின்றனர்.

அப்போது சாய்பாபா காலனி காய்கறி மார்கெட் பகுதியில் தனியா BMW கார் ஒன்று நிற்பதை போலீசார் பார்த்திருக்கின்றனர். விலை உயர்ந்த சொகுசு கார் தனியாக வெகு நேரம் நின்றிருந்த நிலையில் போலிஸ் சென்று விசாரித்திருக்கின்றனர்.

விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக நடந்துகொண்ட இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்திருக்கின்றன. உடனடியாக காரை போலீஸ் சோதனையிட்ட நிலையில் டிக்கியில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பதனை பார்த்திருக்கின்றனர்.

உடனடியாக காருடன் இருவரையும் ஸ்டேசனுக்கு போலிஸ் இட்டு சென்றிருக்கின்றனர். போலீஸ் விசாரணையில் வீரசிவகுமார் , கார்த்தி இருவர் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தன. இவர்கள் மீது முன்னதாக கஞ்சா விற்றதாக கோவையை காவல்நிலையங்களில் வழக்குகளும் நடந்துவருகின்றன.

இவர்களிடம் நடந்த விசாரணையில் வழக்கமான இடங்களில் கஞ்சா விற்பது கடும் கெடுபிடி ஆனதால் சொகுசு காரில் கஞ்சா விற்க முடிவு செய்து ஃபேன்சி நெம்பர் கொண்ட வண்டியை பெங்களூருக்கு சென்று வாங்கியிருக்கின்றனர்.

சொகுசு கார் ஃபேன்சி நெம்பர் என்றால் போலிஸ் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிகையின் அடிப்படையில் கார் வாங்கியிருக்கின்றனர். அதனை மீறி பிடிபட்டால் போலிஸிடமிருந்து தப்பிக்க வண்டியின் ஓனர் பெயரை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வந்திருகின்றனர்.

காரை நோட்டமிட்டதில் கஞ்சா பொட்டலங்கள் மட்டுமின்றி 2 லட்சத்து 40,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆந்திரா , தேனியிலிருந்து கஞ்சா வரவழைத்து விற்றிருக்கின்றனர்.

கஞ்சா விற்றே சொகுசு கார் வசதி வாட்டமாக வாழ்ந்துவருவது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்படுகின்ற விசாரணையின் அடிப்படையில் கஞ்சா சப்ளையர்களை கூண்டோடு பிடிக்க போலிஸ் திட்டமிட்டிருக்கின்றனர்.

சொகுசு காரில் வந்து கஞ்சா விற்ற கஞ்சா வியாபாரிகள் போலிஸாரால் பிடிபட்டது சாய்பாபா காலனி பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியீருக்கின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

7 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

51 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.