பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 2வது முறையாக வாகனத்திற்கு தீ வைத்ததால் அதிர்ச்சி!!
மதுராந்தகம் அடுத்த புக்கத்துறையில் அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மகன் நீலகண்டன் (வயது 35). இவர் பாரதி ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் நீலகண்டன் விளங்கி வருகிறார். இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன் 24ஆம் தேதி இவரது இருசக்கர வாகனம் அவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பொழுது நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை அடுத்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மர்ம நபர்கள் தனது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளதாகவும் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என படளம் காவல் நிலையத்தில் நீலகண்டன் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு அவர் வீட்டின் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர் எரிந்து நாசமானதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீலகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.