மேட்டுப்பாளையத்தில் நகர்நல மையத்தின் முன்பு மக்களுக்கு அளிக்கும் மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆனைக்கார தெரு பகுதியில் நகராட்சி நகர் நல மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி வந்து தங்களின் உடல் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மேலும், இந்த நகர் நல மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த நகர் நல மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் நல்ல மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அங்குள்ள குப்பை தொட்டி பகுதியில் கிடந்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏழை மக்களுக்காக செயல்படும் இந்த மருத்துவமனையில் வரிப்பணத்தை வீணடிக்கும் விதமாக நல்ல மாத்திரைகளை குப்பையில் கொட்டியது பெரும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மேட்டுப்பாளையம் நகராட்சி நகர் நல மையத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குப்பை அள்ளும் வண்டியில் மருந்துகள் கொண்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நோயாளிகள் உபயோகப்படுத்தும் மாத்திரைகள் குப்பையில் கிடப்பது மக்களிடையே அத்திருப்பித்து ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை தலையிட்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் மக்கள் கோரிக்கையாக உள்ளது.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.