கரூர் அருகே நள்ளிரவில் சென்டர் மீடியனில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், அரசு பேருந்து ஓட்டுனர் மீது பயணிகள் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
கரூர் அடுத்த குட்டக்கடை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் ஈரோட்டில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று கரூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, குட்டக்கடை பகுதியில் திடீரென்று சாலையின் நடுவில் அமைந்துள்ள சென்டர் மீடியன் பகுதியில் பேருந்து எதிர்பாராத விதமாக இடித்து நின்றது.
இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. அரசு பேருந்தை ஜெகதீஸ்வரன் என்ற நடத்துனருடன், பெருமாள்ராஜ் என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். பேருந்து விபத்து ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
பேருந்து விபத்து ஏற்படுத்தியதற்கு முழு காரணம் ஓட்டுநர் பெருமாள்ராஜ் என்று பயணிகள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், அந்த ஓட்டுனர் பேருந்தினை இயக்கிய விதம் சரியில்லை எனவும், நீண்ட நேரம் சாலையைப் பார்த்து பேருந்தை இயக்காமல் பேருந்தில் பயணித்த பெண் பயணிகளை அவர் பார்த்து வந்ததாகவும் குற்றம் சாட்டினர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.