கரூர் அருகே நள்ளிரவில் சென்டர் மீடியனில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், அரசு பேருந்து ஓட்டுனர் மீது பயணிகள் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
கரூர் அடுத்த குட்டக்கடை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் ஈரோட்டில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று கரூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, குட்டக்கடை பகுதியில் திடீரென்று சாலையின் நடுவில் அமைந்துள்ள சென்டர் மீடியன் பகுதியில் பேருந்து எதிர்பாராத விதமாக இடித்து நின்றது.
இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. அரசு பேருந்தை ஜெகதீஸ்வரன் என்ற நடத்துனருடன், பெருமாள்ராஜ் என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். பேருந்து விபத்து ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
பேருந்து விபத்து ஏற்படுத்தியதற்கு முழு காரணம் ஓட்டுநர் பெருமாள்ராஜ் என்று பயணிகள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், அந்த ஓட்டுனர் பேருந்தினை இயக்கிய விதம் சரியில்லை எனவும், நீண்ட நேரம் சாலையைப் பார்த்து பேருந்தை இயக்காமல் பேருந்தில் பயணித்த பெண் பயணிகளை அவர் பார்த்து வந்ததாகவும் குற்றம் சாட்டினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.