தஞ்சை ; தஞ்சையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை – கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில், பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் ரமேஷ் என்பவர் ஓட்டுநராகவும், செந்தில் குமார் என்பவர் நடத்துநராகவும் இருந்தனர்.
பாலக்கரை அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் தங்களின் பைக்கை நிறுத்தி விட்டு, அங்கு நின்று கொண்டிருந்தனர். இதனால், ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை ஒதுக்கிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அவர்கள் மீது பேருந்து லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.
மேலும், பேருந்தில் இருந்து எட்டி உதைத்து ஓட்டுநர் ரமேஷை வெளியே தள்ளி, கும்பலாக சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, அந்த வழியே சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இதனை வீடியோ எடுத்துள்ளனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்க முயன்றுள்ளது.
மேலும் படிக்க: 3 ஆண்டுகள் கோட்டை விட்டாச்சு.. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல ; திமுக அரசுக்கு மீது அண்ணாமலை பய்ச்சல்!!
இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் ரமேஷ் மற்றும் நடத்துநர் செந்தில் குமார் உள்பட 4 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எஞ்சியவர்களை தேடி வந்த நிலையில், உதயகுமார் (25), கார்த்திகேயன் (21), மாரிமுத்து (18) ஆகியோரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.