‘இந்த வழியாக பேருந்து போகாது, போனால் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்த போதும், அதனை மீறி பேருந்தை ஓட்டி பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் தரைப்பாலம் வழியாக சென்றபோது, அங்கு ஏற்கனவே கனமழை பெய்ததின் காரணமாக, தரைப்பாலத்தில் வெள்ளம் தேங்கியிருந்தது. அந்த வழியாக பேருந்து வந்த போது பேருந்து போகாது என ஓட்டுனரிடம் ஒருவர் எச்சரித்தார்.
மேலும் படிக்க: மீண்டும் 54 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!!!
அதையும் மீறி பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்பொழுது அருகில் இருந்த ஒருவர் போங்க மாட்டிக்கொள்வீர்கள் என கூறிய அடுத்த நிமிடத்தில் பேருந்து வெள்ளத்தில் சிக்கி கொண்டது. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் கைக்குழந்தைகள், பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் எமர்ஜென்சி எக்ஸிட் கதவை உடைத்து பத்திரமாக அவர்களை மீட்டனர்.
பயணிகளின் உயிரோடு விளையாடிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.