கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை ஊழியருக்கு சிகிச்சை அளிக்க காகித ஆலை மருத்துவமனை அலட்சியம் காட்டியதால், அந்த நபர் உயிரிழந்ததாகக் கூறி சக தொழிலாளர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலையில் ஆயிரத்து மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கிரெயன் ஆப்பரேட்டராக அருண் சுதன் (32) என்பவர் திருவையாறு சார்ந்தவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், சஹானா என்கின்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது.
நேற்று இரவு பணிக்கு உள்ளே வேலைக்கு சென்ற அவரை, 11 மணி அளவில் நெஞ்சுவலி என ஆலையில் உள்ள முதலுதவி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், வாய்வு தொல்லையாக இருக்கும் என்று கூறி சாதாரண மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகும் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி இருந்திருக்கின்றது. காலை 4 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது மயங்கி கீழே விழுந்து விட்டார். காகித அலை முதலுதவி மையத்தில் பரிசோதித்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் அவர் அனுப்பப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு 11 மணிக்கு உடல் சரியில்லை என முதல் உதவி மையத்திற்கு சென்ற பொழுது முறையாக பரிசோதித்து பார்த்திருந்தால், அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும், அவருடைய இறப்பிற்கு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என கூறி, அவரது உறவுனர்கள் மற்றும் தொழிலாளர்கள், மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.