கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளி மலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடைபெற்ற 33 வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42 வது சமய வகுப்பு மாணவர் மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும் போது, நாங்கள் இந்தியை திணிக்கவில்லை,
பாராளுமன்றதை பொறுத்த அளவில் எல்லா உறுப்பினர்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலர் சிபாரிசு மட்டுமே செய்துள்ளனர்.
மாநில மொழிகளை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழிகளை மீறி செயல்பட வேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை.
ஆனால் இதை வைத்து அரசியல் செய்யவே மீண்டும் மீண்டும் இந்த போராட்டத்தை கையில் எடுக்கின்றனர். மேலும் உங்களுக்கு எவ்வளது தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே தமிழ் வழி பற்று எங்களுக்கும் இருக்கிறது.
தமிழிசைக்கும் அதே பற்று இருக்கிறது. ஏதோ நாம் நியாயப்படுத்தி பேசினால் உடனே உங்களை எல்லாம் இந்தி இசை என்பதை நான் எல்லாம் ஒத்து கொள்ள மாட்டேன் என ஆவேசமாக பேசிய அவர், இந்தி மொழி அதிகம் பேசும் மத்திய பிரதேசத்தில் தாய் மொழி வழி மருத்துவ கல்வி முறையை கொண்டு வந்திருக்கின்றனர்.
இத்தனை வருடம் ஆட்சி செய்து என்ன செய்தீங்க என்று கேள்வி எழுப்பிய அவர் ஏன் தமிழ் வழியில் ஒரு புத்தகம் கொண்டு வரமுடியாதா தமிழ் வழியில் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியாதா.
அப்படி பட்ட முயற்ச்சிகளை எடுங்கள் சும்மா இதே சொல்லிக்கொண்டு இருக்காமல் தமிழில் புது புது முயற்சிகளை செய்து நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள் என்றும் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.