Categories: தமிழகம்

அரசு கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… தமிழக அரசின் மிகப்பெரிய தவறால் நடந்த கொடூரம் : ராமதாஸ் கண்டனம்!

அரசு கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… தமிழக அரசின் மிகப்பெரிய தவறால் நடந்த கொடூரம் : ராமதாஸ் கண்டனம்!

“ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அவருடன் பயிலும் மாணவர்களால் மயக்க மருந்து கொடுத்து, கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன;

கஞ்சா போதையில் இக்கொடுமையை அரங்கேற்றிய மனித மிருகங்கள் இதுவரை கைது செய்யப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது;

தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கஞ்சா தான் காரணமாக இருக்கப் போகிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எச்சரித்திருந்தேன்;

ஆனால், அதன் முக்கியத்துவம் குறித்து அறியாத காவல்துறையினர், கஞ்சா கடத்தலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை;

அதன் விளைவு தான் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும், இது அரசின் மிகப் பெரிய தவறாகும்; எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்;

குற்றச்செயல்கள் அதிகரிக்கவும், சட்டம் & ஒழுங்கு சீர்குலையவும் காரணமாக உள்ள கஞ்சாவை அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.