அரசு கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… தமிழக அரசின் மிகப்பெரிய தவறால் நடந்த கொடூரம் : ராமதாஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 7:21 pm
Ramadoss - Updatenews360
Quick Share

அரசு கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… தமிழக அரசின் மிகப்பெரிய தவறால் நடந்த கொடூரம் : ராமதாஸ் கண்டனம்!

“ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அவருடன் பயிலும் மாணவர்களால் மயக்க மருந்து கொடுத்து, கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன;

கஞ்சா போதையில் இக்கொடுமையை அரங்கேற்றிய மனித மிருகங்கள் இதுவரை கைது செய்யப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது;

தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கஞ்சா தான் காரணமாக இருக்கப் போகிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எச்சரித்திருந்தேன்;

ஆனால், அதன் முக்கியத்துவம் குறித்து அறியாத காவல்துறையினர், கஞ்சா கடத்தலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை;

அதன் விளைவு தான் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும், இது அரசின் மிகப் பெரிய தவறாகும்; எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்;

குற்றச்செயல்கள் அதிகரிக்கவும், சட்டம் & ஒழுங்கு சீர்குலையவும் காரணமாக உள்ள கஞ்சாவை அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Views: - 184

1

0