தர்மபுரி: கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தருமபுரி மாம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விஜயகுமார் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக ஊர் தர்மகர்த்தா ராஜசேகர், ஊர்கவுண்டர் தவுரிசெல்வம் உள்ளிட்டோர் கட்டப் பஞ்சாயத்து செய்து, விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விஜயகுமார் நடத்தி வரும் மளிகை கடையில் யாரும் பொருட்கள் வாங்க கூடாது எனவும், மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தண்டோரா போடப்பட்டதாக தெரிகிறது. கோயில் போன்ற பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதித்துள்ளதாகவும் விஜயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தம்மை ஊரைவிட்டுத் தள்ளிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். தேர்தலில் ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தியதை தாம் ஏற்க மறுத்ததால், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.