Categories: தமிழகம்

பெற்ற மகளுக்கு தொடர் பாலியல் தொல்லை: கொடூர தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

விருதுநகர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் ஜெகஜோதி மணி ( 43). இவர் தனியார் கிளாஸ் ஹவுசில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அன்பு செல்வி(36) தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் 9ம் வகுப்பும், இரண்டாவது மகள் 8ம் வகுப்பும் தனியார் பெண்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

கணவர் ஜெகஜோதி மணி வேலைக்கு சென்றுவிட்டு மதியம் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில் மூத்த மகள் பள்ளிக்கு செல்லாத போது அவரை தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அம்மாவிடமும் தங்கையிடமும் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி, வலுக்கட்டாய பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தந்தையின் தொல்லை தாங்கமுடியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். பள்ளிக்குச் சென்றபோது அந்த கடிதம் தவறி விழுந்து தலைமை ஆசிரியையின்  கைக்கு கிடைத்த படியால் அது குறித்து தாயார் அன்பு செல்வியையும் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமியை அழைத்து தனியாக விசாரித்தபோது, அழுதுகொண்டே தந்தை ஜெகஜோதி மணி செய்த பாலியல் தொந்தரவுகளை கூறியுள்ளார்.

தாயார் அன்புச்செல்வி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில், பெற்ற மகளையே சீரழித்த கணவனை கைது செய்து கடும் தண்டனை தருமாறு புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.

மேலும் இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பரிந்துரையின் பெயரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைத்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

15 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

16 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

17 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

17 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

18 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

18 hours ago

This website uses cookies.