Categories: தமிழகம்

தேசத்துக்கு விரோதமாக செயல்பட்டு வயிற்றை கழுவணுமா : ஒன்றிய அரசு என கூறிய அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்த ஹெச்.ராஜா!!

திருச்சி : லாவண்யா விவகாரம் தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது எனவே. சிபிஐக்கு மாற்றியதை வரவேற்கிறேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக உறுதியேற்போம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறைந்த மருத்துவர் ஸ்ரீதர் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, தமிழகம் பயங்கரவாத சக்திகளின் கூடாரமாக இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளை படுகொலை செய்வதற்கான திட்டங்கள் இங்கு தான் தீட்டப்படுகின்றன. எனவே, தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்வதை ஏற்க முடியாது.

பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் ‘ஒன்றிய அரசு’ என்று கூறும், சென்னையில் உயர் பதவியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை கடுமையாக எச்சரிக்கிறேன். அவர், மத்திய அரசு அதிகாரி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களை மற்ற மாநிலங்களுக்கு மாற்றினால் அங்கு போய் இப்படி சொல்வாரா. அவர் முதுகெலும்பில்லாத அதிகாரி.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. மத்தியில் அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.

அரியலூர் மாணவி வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது, நீதிபதியின் பரந்த ஞானத்தை காட்டுகிறது. தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

19 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

19 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

20 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

20 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

21 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

21 hours ago

This website uses cookies.