Categories: தமிழகம்

50 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி : தனியார் உணவகத்தின் அதிரடி அறிவிப்பு.. அலைமோதிய உணவு பிரியர்கள்.. திணறிய போலீஸ்!!

கரூரில் 50 பைசாவிற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி – தனியார் உணவக முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனை நீண்ட வரிசையில் காத்திருந்து, முண்டியடித்துக் கொண்டு சாப்பிட்டுச் சென்ற பிரியாணி பிரியர்கள் – போக்குவரத்துக்கு இடையூ ஏற்பட்டதால் போலீசார் வந்து சீரமைத்ததால் பரபரப்பு.

கரூர் – திருச்சி சாலையில் காந்தி கிராமம் பகுதியில் tandoori tribes எனும் பெயரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துவங்கப்பட்டு முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு 50 பைசாவிற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

முதலில் வரும் 100 நபர்கள் 50 பைசா கொடுத்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டு செல்லலாம் என சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டு இருந்தது. மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 11.30 மணி முதலே நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் காத்திருந்தனர்.

மதியம் 12 மணி முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் உள்ளே அனுமதித்து அவர்களுக்கு சுடச் சுட சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவியுடன் பரிமாறப்பட்டது. இந்த டோக்கனைப் பெற பலரும் முண்டியடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், 50 பைசாவுடன் வந்தவர்கள் இரு சக்கர வாகனங்களை சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து அங்கு பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வந்தனர்.

போக்குவரத்தை சீரமைத்த அவர்கள், கடையின் உரிமையாளரை அழைத்து இது போன்று நிகழ்ச்சிகள் நடத்தும் போது காவல் நிலையங்களில் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதனையடுத்து 100 டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் பிரியாணி விற்பனை முடிந்ததாக தெரிவித்ததை அடுத்து அங்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 127 ரூபாய் வழக்கமாக விற்பனை செய்யப்படும் பிரியாணி 50 பைசாவிற்கு கிடைக்கும் என வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

6 minutes ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

17 minutes ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

1 hour ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

2 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

3 hours ago

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?

Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…

3 hours ago

This website uses cookies.