தருமபுரி: ஒகேனக்கலில் திடீர் நீர்வரத்தால் நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொண்டு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல். இங்கு தினந்தோறும் கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் பகுதிகளில் நேற்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்த அளவே வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று 2 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் அதிகரித்துக் கொட்டுகிறது.
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
This website uses cookies.