ஒப்பந்ததாரருக்கு கோரும் டீசல் விலை உயர்வு இழப்பீட்டை வழங்குமாறு KCP Infra Limited நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேரும் திடக்கழிவுகளை டிப்பர் லாரிகள் மூலம் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை KCP Infra Limited நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இதற்கான பணிகளை கேசிபி நிறுவனத்தின் சார்பில் கே.முத்துகுமாராசாமி கவனித்து வந்தார்.
இந்த நிலையில், திடக்கழிவு தொடர்பான ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகும், கோவை மாநகராட்சி புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்யாததால், கேசிபி நிறுவனமே தொடர்ந்து திடக்கழிவுகளை அப்புறப்படுத்தி வந்தது. ஆனால், இதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் டீசலுக்கான விலை உயர்வு இழப்பீட்டுத் தொகையை கோவை மாநகராட்சி நிர்வாகம் விடுவிக்கவில்லை.
இதனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும் பணிகளை செய்த காலகட்டத்திற்கான டீசல் விலை உயர்வு இழப்பீட்டு தொகையை விடுவிக்க கோவை மாநகராட்சிக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra LTD சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதி எஸ்.சௌந்தர், 6 வாரத்திற்குள் டீசல் விலை உயர்வு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் KCP Infra Limited நிறுவனத்திற்கு கிடைக்கும் இந்த இழப்பீடானது, மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணிகளை மேற்கொள்ளும் பிற ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
This website uses cookies.