காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ் அரசியல் நாடகமாடுகிறது என்றும், இதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள 27 அடி உயர வேலுக்கு உலக நன்மைக்காக சத்ரு சம்கார ஹோமம் மற்றும் பால் அபிஷேகம் இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியதாவது :- காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 14 ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் காவிரி நதிநீரை பெற வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் கண்டித்தும், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ் அரசியல் நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். காங்கிரசும், திமுகவும் அமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏன் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு திமுக துணை போகிறது. உளவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கோரிக்கை வைத்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.