கரூரில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் முன்பு கோஷமிட்டவர்களில் ஒருவரை போலீசார் அடித்து குண்டு கட்டாக காவல் நிலையத்தில் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு ஜோதிடர் தெருவில் வசிப்பவர் சக்தி (32).
இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வெங்கமேடு எம்.ஜி.ஆர் சிலை அருகில் இந்துக் கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என்றும், ஜவுளி ஆனாலும் சரி, மளிகை பொருட்கள் ஆனாலும் சரி, கம்ப்யூட்டர் முதல் கருவேப்பிலை வரை நாம் வாங்கும் பொருட்கள் இந்துக்கள் கடையிலேயே வாங்க வேண்டும், கடைகளில் இந்து சாமி படம் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்று மதப் பிரிவினை ஏற்படும் வகையில் நோட்டீஸ் ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பினார்.
இது தொடர்பாக வழக்கு வெங்கமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த புகாரின் பெயரில் இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி கைது செய்யப்பட்டார். அவரை வெள்ளியணை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
அப்போது, இந்து முன்னணியினர் கோஷங்களை எழுப்பியதால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணியின் கரூர் நகர செயலாளர் வெற்றியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தாக்கியும், அவரை குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, வெங்கமேட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, இனி தமிழகம் முழுவதும் அந்த துண்டு பிரசூரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் இந்து முன்னணி அறிவித்து இன்று முதல் நடைமுறைபடுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.