Categories: தமிழகம்

கிரஹப்பிரவேசத்தில் வந்த மொய்ப்பணம் ரூ.5.75 லட்சம் அபேஸ் : வீட்டை கட்டிய தொழிலாளிகளே கை வைத்தது அம்பலம்!!

கோவை : காளப்பட்டியில் கிரகப்பிரவேசத்தில் வந்த மொய்பணம் ரூ.5.75 லட்சம் கொள்ளைபோன சம்பவத்தில் வீட்டை கட்டிய தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள காளப்பட்டி டைமண்ட் தாசன் அபார்ட் மெண்ட்டை சேர்ந்தவர் கெளதமன் (வயது 33). தனியார் நிறுவன உரிமையாளர்.

இவர் சமீபத்தில் காளப்பட்டி சிவா நகர் விரிவு பகுதியில் புதியதாக வீடு ஒன்றினை ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் வாங்கியுள்ளார். அன்றைய தினமே கிரகப்பிரவேசமும் நடைபெற்றுள்ளது.

கிரகப்பிரவேசம் முடிந்து மாலையில் உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னர் கெளதமனும், அவரது மனைவியும் செய்முறைப்பணம் வந்துள்ளதை எண்ணிப்பார்த்ததில் ரூ.5.75 லட்சம் இருந்துள்ளது.

அந்த பணத்தை கட்டிலில் வைத்து விட்டு கணவன், மனைவி இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். இதனை ஜன்னல் கண்ணாடி வழியாக அருகில் உள்ள வீட்டின் கதவை உடைத்து அதன் வழியே மாடி பால்கனி வழியாக சென்று திருடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கெளதமன் கோவில்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விளாங்குறிச்சி சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,அவ்வழியே வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி(வயது 20), கார்த்திக்(வயது 25) என்பதும் பணத்தை பறிகொடுத்த கெளதமனின் புதிய வீட்டில் கட்டிட பணிகளை மேற்கொண்ட தொழிலாளிகள் என்பதும், கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.5.75 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

7 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

8 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

8 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

8 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

10 hours ago

This website uses cookies.