ராணிப்பேட்டை : தகரகுப்பம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி பள்ளி மாணவி தனி நபராக ஆட்சியரிடம் மனு அளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி ராணிப்பேட்டையில் உள்ள வி,ஆர்,வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்த பின்னர் பள்ளி சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதந்து தனி நபராக மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார் .
அதில் தகரகுப்பம் கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தினந்தோறும் காலை 7:30 மணிக்கு வரும் அரசு பேருந்தில் செல்கிறோம். ஆனால் அதிக அளவில் பொது மக்கள் மாணவர்கள் பயணிப்பதால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும், எனவே 8 மணியளவில் மேலும் ஒரு பேருந்தை இயக்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வசதியாக இருக்கும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் திரு,பாஸ்கர பாண்டியன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறியதால் மகிழ்ச்சி அடைந்த மாணவி வீட்டிற்கு சென்றார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.