ராணிப்பேட்டை : தகரகுப்பம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி பள்ளி மாணவி தனி நபராக ஆட்சியரிடம் மனு அளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி ராணிப்பேட்டையில் உள்ள வி,ஆர்,வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்த பின்னர் பள்ளி சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதந்து தனி நபராக மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார் .
அதில் தகரகுப்பம் கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தினந்தோறும் காலை 7:30 மணிக்கு வரும் அரசு பேருந்தில் செல்கிறோம். ஆனால் அதிக அளவில் பொது மக்கள் மாணவர்கள் பயணிப்பதால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும், எனவே 8 மணியளவில் மேலும் ஒரு பேருந்தை இயக்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வசதியாக இருக்கும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் திரு,பாஸ்கர பாண்டியன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறியதால் மகிழ்ச்சி அடைந்த மாணவி வீட்டிற்கு சென்றார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.