தஞ்சை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரி குளங்களில் தண்ணீரை ஏன் நிரப்ப வில்லை என கேட்டதற்கு ஏரி குளங்களில் தண்ணீரை நிரப்பினால் அந்தப் பகுதியில் மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படும் என்பதால் தான் நிரப்ப வில்லை என அமைச்சர் மலுப்பலாக பதில் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி. செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்லணையிலிருந்து அணைக்கரை வரை பல்வேறு கிராமங்களுக்கு சென்று முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
50,000 மணல் மூட்டைகள் தயாராக இருப்பதாகவும் 76 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மீதமுள்ள காலி சாக்குகளிலும் மணல் மூட்டைகளை நிரப்ப உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரி குளங்களில் ஏன் தண்ணீரை நிரப்ப வில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தற்பொழுது ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பினால் அதிக மழை பெய்யக்கூடிய சூழ்நிலை இந்த ஆண்டு உள்ளதால் அந்த பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் என மகேஷ் பொய்யாமொழி மலுப்பலாக தெரிவித்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.