கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை சந்திக்க 22 நாட்கள் மட்டுமே கிடைத்தது,முழு காய்ச்சலுடன் மக்களை சந்தித்தேன், கடலூர் மாவட்டத்தின் தீராத பிரச்சினைகளை தீர்க்கவே தேர்தல் களம் கண்டு தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் பெற்றேன்.
என்னை நம்பி வாக்களித்து மக்களுக்கு நன்றி என்றார்.அதிகாரம் இருந்ததால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் இத்துடன் என் அரசியல் களம் நிற்காது என தெரிவித்தார்.
கடந்த முறை 38 பேரால் நாட்டுக்கு கிடைத்தது என்ன? உங்கள் தொகுதியின் எம்பி என்ன செய்தார்? மீண்டும் அவர்களே வந்தால் என்ன செய்வீர். உங்களுக்கு அரசியல் விடுதலை எப்படி கிடைக்கும் என தெரிவித்தார்.அரசியல் புரிதல் மக்களுக்கு இல்லாததே காரணம் என கடுமையாக சாடினார்.
அண்ணாவையும்,பெரியாரையும் இன்னும் எவ்வளவு நாட்கள் சொல்லி ஏமாற்றுவார்கள் என கடிந்து கொண்ட அவர்,அடுத்த 5 ஆண்டுகள் மக்கள் இன்னல்களை சந்திப்பீர் என காட்டமாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: போலி கருத்துக்கணிப்புகளை திணித்து பங்குச்சந்தைகளில் ஊழல் : பாஜக மீது ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!
மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை எனக் கூறிய அவர்,என் மொழி, மண், இனத்திற்கு எந்த சிக்கல் வந்தாலும் தங்கர் பச்சான் போராடுவேன் என தங்கர் பச்சான் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.