வேலூர் ; சட்ட விரோதமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் கள்ளச் சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ரெட்டி மாங்குப்பம் ஆற்றாங்கரையோர பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டப்பகல் மற்றும் இரவு என இரண்டு வேலையும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து வருகிறது. தினக்கூலிக்கு ஆட்களை வைத்து கள்ளசாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கள்ளசாராய விற்பனையால் கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேலூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி சாராய ஊரல் மற்றும் மூலப்பொருட்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டும், மேலும் கள்ளச்சாராய விபாயாரிகளை கைது செய்து வரும் நிலையில், இது போன்று கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது.
இதனை காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கள்ளச்சாராய விற்பனை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.