பழனி அருகே கீரனூரில் வீட்டில் வைத்து பெண்மணி ஒருவர் மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் உள்ளது. கீரனூர் பேருந்து நிலையம் எதிரே மூதாட்டி ஒருவர் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும், அதிகாலை 3 மணி முதலே விற்பனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு மதுவை வாங்கி குடித்துவிட்டு சீர்கெட்டு வருவதாகவும், இதனால் பல இளைஞர்கள் குடும்பம் ஆதரவின்றி வருவதாகவும், இந்த மூதாட்டி கள்ளசந்தையில் அதுவும் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாகவும் எனக்கூறி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கீரனூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.