Categories: தமிழகம்

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் வழக்கறிஞருக்கு பயின்றுவிட்டு கோவில்பட்டியில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் ‌பயிற்சி பெற்று வருகிறார்.

இவர் பகுதியில் உள்ள 16 வயது சிறுவனை பாம்பு கார்த்திக் என்ற கார்த்திக் ராஜா ரேஷன் அரிசி வாங்கி தர வலியுறுத்தி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு சிறுவன் மறுக்கவே அவரை பாம்பு கார்த்திக் மட்டும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை மாரிச்செல்வம் தட்டிக் கேட்டுள்ளார். மேலும் பாம்பு கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் கடத்திச் சென்ற ரேஷன் அரிசியை விருதுநகர் பகுதியில் வைத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

போலீசாருக்கு மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்ததாக கூறி கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் பாம்பு கார்த்திக் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் மாரிசெல்வம் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியது மட்டுமின்றி , மாரிச்செல்வம் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மற்றும் ஊத்துப்பட்டி அருகே செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாரி செல்வத்தின் வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து கொளுத்தியது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பாம்பு கார்த்திக் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் படிக்க: பூத் ஏஜெண்டா வேலை செய்ததற்கு பணம் எங்கே? BJP பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர்!

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,அரசியல் கட்சியினர் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மாதவா ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குப்பனாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், ஓணமாக்குளத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் , கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து, கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த சண்முகராஜ், கயத்தாறை சேர்ந்த ராஜா என்ற சண்முகராஜா , அதே பகுதி சேர்ந்த சகோதரர்கள் முத்துகிருஷ்ணன், நரசிம்மன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாம்பு கார்த்திக் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

10 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

12 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

12 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

13 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

13 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

14 hours ago

This website uses cookies.