கரூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 77வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியேற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
அணிவகுப்பில் பங்கேற்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நின்றதால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அப்போது உடனிருந்த இரண்டு காவலர்கள் மயக்கம் அடைந்த பெண் காவலரை அழைத்துச் சென்று நிழலில் அமர வைத்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சுதந்திர தின விழாவிற்காக விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் வைத்திருந்தனர். அப்போது குடிநீர் தொட்டியில் மூடி கூட இல்லாமல் திறந்தநிலையில், தூசி படிந்து மிகவும் அசுத்தமாகவும், பாசானுடன் இருந்ததால் மாணவர்கள் அந்த தண்ணீரை குடிப்பதற்கு அச்சமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.