அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதை கோழை பிரதமர் கேட்க முன்வரவில்லை என்று வேலூர் தொகுதி நாடாளுமன்ற சுயேட்சை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான், வேலூர் மண்டி தெரு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளுக்கும் சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
மேலும் படிக்க: காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்… விடியவிடிய சீரழித்த கும்பல் ; திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!
அங்கு அவருக்கு பூக்கடை வியாபாரிகள் மாலை அணிவித்து பொன்னாடை போற்றி மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். மேலும், இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு அனைத்து பகுதிகளுக்கும் சென்று வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும், பூக்கடையில் இருந்த தாமரை பூவையும் துளசி இலையையும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தாமரையை தின்னாச்சி, இரட்டை இலையை மென்னாச்சு பலாப்பழம் ஜெயிச்சாச்சு என்று கூறினார்.
மேலும் படிக்க: அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை… கோவையில் விடிய விடிய ரெய்டு..!!
பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் தனியாகத்தான் வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். பின்பு தன்னிடம் சில பேர் ஆதரவு கொடுப்பதாக தன்னிடம் கூறினார்கள். பின்பு அனைத்து இடங்களிலும் திமுக குறித்து அவதூறாக பேசி வந்தனர். ஆனால் அதிமுக பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை.
பின்பு இது குறித்து விசாரித்த போது தான் தெரிகிறது. அதிமுக இவர்களை விலக்கி வாங்கிக்கொண்டு தன்னிடம் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இது போன்ற துரோகம் நடந்ததால் எனக்கு யாரும் வேண்டாம். நான் மக்களுடன் கூட்டணி. எனக்கு மக்கள் இருக்கிறார்கள். நான் மக்களுடன் இணைந்து வேலூர் பகுதியில் போட்டியிடுகிறேன். என்னை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டனர்.
அதிமுகவினர் அணைக்கட்டு தொகுதி வேப்பங்குப்பம் பகுதியில் நேற்று நான் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, நான் இல்லாத நேரத்தில் அதிமுக காரர்கள் அவதூறாக பேசி உள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளேன். மேலும், காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நான் வரவேற்கிறேன். அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து விட்டார்கள். கோழை பிரதமர் வாயை திறக்க முன்வரவில்லை, எனக் கூறினார்.
தமிழகத்திற்கு மோடி வருவது குறித்த கேள்விக்கு, மன்சூர் அலிகான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடி மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசங்களில் சென்று மாநாடு நடத்த வேண்டும். ஆனால், அங்கெல்லாம் செல்லாமல் இங்கு நான் தேர்தலில் நிற்பதால் பிரதமர் மோடி வருகிறார், என்று தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.