Categories: தமிழகம்

உண்மையை உரக்க கூறியதால் கிடைத்த பரிசு : திமுக பிரமுகரின் மகள் மீது புகார் கொடுத்த சுயேட்சை வேட்பாளர் கம்யூ., கட்சியில் இருந்து நீக்கம்!!

கோவை : கோவையில் திமுக வேட்பாளர் தர்மத்திற்கு செலவு செய்வதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை குனியமுத்தூர் கிளையில் உறுப்பினராக உள்ளவர் பா.விஜயகுமார் மற்றும் அவரது மனைவி வி.நிரஞ்சனாதேவி. 97 வது வார்டில் தேர்தல் பணி செய்து வந்த இவருக்கு பதிலாக திமுக நிர்வாகியான மருதமலை சேனாதிபதியின் மகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த வார்டில் நிரஞ்சனா தேவி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த சூழலில் நிரஞ்சனா தேவி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நிவேதிதா வரம்பு மீறி செலவு செய்வதாகவும், பொதுமக்களுக்கு பண விநியோகம் செய்வதாகவும் புகார் அளித்தார்.

இந்த நிலையில் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகம் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, குனியமுத்தூரை சேர்ந்த கட்சி உறுப்பினர் தோழர் வி.நிரஞ்சனாதேவி  வார்டு எண் 97ல் கட்சியின்  கட்டுப்பாடுகளை  மீறி போட்டியிடுகிறார்.

அவருக்கு துணையாக அவரது கணவர் பா. விஜயகுமார் செயல்பட்டு வருகிறார். கட்சியின் கட்சி கட்டுப்பாடுகளை மீறியுள்ள  விஜியகுமார்  மற்றும்  நிரஞ்சனாதேவி ஆகிய  இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.  அவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இனி மேற்கொண்டு எவ்வித சம்மந்தமும் இல்லை. கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

5 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

2 hours ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

5 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

5 hours ago

This website uses cookies.