Categories: தமிழகம்

கடன் கொடுத்தவர்களை கல்லால் தாக்கிய சுயேட்சை வேட்பாளர் : பண மோசடி வழக்கில் கைதானதால் பரபரப்பு!!

அரியலூர் : பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் நகரில் சாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிவேல். அதிமுகவை சேர்ந்த இவர் தற்பொழுது நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வழங்காததால் 16வது வார்டு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் செந்துறை ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் கடந்த ஆறு மாதமாக கம்பி வாங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கம்பி வாங்கிய வகையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 563 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.

அந்த தொகையை தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி அரியலூர் கவரதெரு அருகே மணிவேலிடம் பணம் கேட்கும் போது பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக திட்டி கீழே கிடந்த கல்லை எடுத்து பணம் கேட்டு வந்தால் மண்டையை உடைத்து உடைத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மணிவேலை கைது செய்தனர். சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

11 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

12 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

12 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

13 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

14 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

15 hours ago

This website uses cookies.