அரியலூர் : பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் நகரில் சாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிவேல். அதிமுகவை சேர்ந்த இவர் தற்பொழுது நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வழங்காததால் 16வது வார்டு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் செந்துறை ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் கடந்த ஆறு மாதமாக கம்பி வாங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கம்பி வாங்கிய வகையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 563 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.
அந்த தொகையை தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி அரியலூர் கவரதெரு அருகே மணிவேலிடம் பணம் கேட்கும் போது பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக திட்டி கீழே கிடந்த கல்லை எடுத்து பணம் கேட்டு வந்தால் மண்டையை உடைத்து உடைத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மணிவேலை கைது செய்தனர். சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.