அரியலூர் : பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் நகரில் சாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிவேல். அதிமுகவை சேர்ந்த இவர் தற்பொழுது நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வழங்காததால் 16வது வார்டு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் செந்துறை ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் கடந்த ஆறு மாதமாக கம்பி வாங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கம்பி வாங்கிய வகையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 563 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.
அந்த தொகையை தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி அரியலூர் கவரதெரு அருகே மணிவேலிடம் பணம் கேட்கும் போது பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக திட்டி கீழே கிடந்த கல்லை எடுத்து பணம் கேட்டு வந்தால் மண்டையை உடைத்து உடைத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மணிவேலை கைது செய்தனர். சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.