கோவை: கோவையில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை இடித்து விடுவதாக கூறி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை இக்கரை போலுவாம்பட்டி பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் 15 குடும்பத்தினர் இக்கரை போலுவாம்படி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
மின் வரை நாங்கள் வசித்து வரும் குடியிருப்புக்கு மின் வரி, ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் வைத்துள்ளோம். இந்த நிலையில் எங்கள் குடியிருப்பின் அருகில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர் நாங்கள் குடியிருக்கும் நிலம் அவருக்குச் சொந்தமானது என்று கூறி வீட்டை காலி செய்யச் சொல்கிறார்.
காலி செய்யவில்லை என்றால் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீட்டை தரைமட்டமாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.