Categories: தமிழகம்

கெட்ட கெட்ட வார்த்தைகளால் இளைஞரை திட்டிய செர்ணாக்கா : பைக்கை சீஸ் செய்ய வந்த ஊழியர்களை வசை பாடிய பெண்!!

பார்ப்பதற்கு சினிமாவில் வரும் சொர்ணாக்கா போல காட்சி தரும் இவர் தான் இருசக்கர வாகனத்தை சீசிங் செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்களை ஆபாசமாக வசைபாடிய வேடசந்தூர் சுனாமி சுதா.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிக்ராம்பட்டியில் வசித்து வருபவர் சுதா. தனியார் நிதிநிறுவனத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு கடன் பெற்று வாகனம் வாங்கிய நிலையில் மாதாந்திர தொகை பல மாதங்கள் சரியாக செலுத்தி வந்துள்ளார்.

ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பணம் செலத்த தாமதமாகியுள்ளது. பல மாதங்கள் ஆகியும் மாதம்தோறும் கடன் தவணையை கட்டாததால் இன்று அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.

அந்தப் பெண்ணிடம் தங்களது இரு சக்கர வாகனத்தின் ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க என்று கூறியுள்ளனர். அவர் தனது வீட்டிற்குள் சென்று ஆவணங்களை எடுத்து வருவதற்குள் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் சென்றுவிட்டனர்.

ஒரு இளைஞர் அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட மற்றொரு இளைஞர் அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை அந்தப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகே அவரை பிடித்து நீங்கள் யார் எதற்காக இரு சக்கர வாகனத்தை திருடி சென்றீர்கள் என்று கேட்டபோது சில மாதங்களாக மாதத் தவணை கட்ட தவறியதாகவும் நிறுவனத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வரக் கூறினார்கள் என்றும் அதனால்தான் எடுத்துச் சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார்

உங்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அந்தப்பெண் கூறியுள்ளார். அதற்கு நான் இந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்து உள்ளேன் ஆகையால் என்னிடம் அடையாளம் அட்டை இல்லை எனவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்தப் பெண் நீ யார் என்று எனக்கு தெரியாது எப்படி என் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லலாம் என அந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசி வசை பாடினார்

சாலை என்று கூட பாராமல் அந்த இளைஞரை கடுமையாக தகாத வார்த்தைகளால் பேசிய அந்தப் பெண், இளைஞரின் கைப்பேசியை பிடுங்கி வைத்துக் கொண்டார்.

பின்பு அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள் அந்த இளைஞரை தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்

அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு சென்ற அவர்கள் இவனை விடக்கூடாது என்று கூறிக் கொண்டே வாடா எங்க வீட்டுக்கு என்று அழைத்து சென்றனர்.

மேலும் சாலையின் நடுவே ஒரு இளைஞரை ஆபாச வார்த்தைகளால் பேசியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் ஒருபெண் சண்டையிட்டது அப்பகுதியில் சென்ற பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

9 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

10 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

10 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

11 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

11 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

12 hours ago

This website uses cookies.