பார்ப்பதற்கு சினிமாவில் வரும் சொர்ணாக்கா போல காட்சி தரும் இவர் தான் இருசக்கர வாகனத்தை சீசிங் செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்களை ஆபாசமாக வசைபாடிய வேடசந்தூர் சுனாமி சுதா.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிக்ராம்பட்டியில் வசித்து வருபவர் சுதா. தனியார் நிதிநிறுவனத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு கடன் பெற்று வாகனம் வாங்கிய நிலையில் மாதாந்திர தொகை பல மாதங்கள் சரியாக செலுத்தி வந்துள்ளார்.
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பணம் செலத்த தாமதமாகியுள்ளது. பல மாதங்கள் ஆகியும் மாதம்தோறும் கடன் தவணையை கட்டாததால் இன்று அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.
அந்தப் பெண்ணிடம் தங்களது இரு சக்கர வாகனத்தின் ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க என்று கூறியுள்ளனர். அவர் தனது வீட்டிற்குள் சென்று ஆவணங்களை எடுத்து வருவதற்குள் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் சென்றுவிட்டனர்.
ஒரு இளைஞர் அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட மற்றொரு இளைஞர் அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை அந்தப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகே அவரை பிடித்து நீங்கள் யார் எதற்காக இரு சக்கர வாகனத்தை திருடி சென்றீர்கள் என்று கேட்டபோது சில மாதங்களாக மாதத் தவணை கட்ட தவறியதாகவும் நிறுவனத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வரக் கூறினார்கள் என்றும் அதனால்தான் எடுத்துச் சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார்
உங்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அந்தப்பெண் கூறியுள்ளார். அதற்கு நான் இந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்து உள்ளேன் ஆகையால் என்னிடம் அடையாளம் அட்டை இல்லை எனவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அந்தப் பெண் நீ யார் என்று எனக்கு தெரியாது எப்படி என் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லலாம் என அந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசி வசை பாடினார்
சாலை என்று கூட பாராமல் அந்த இளைஞரை கடுமையாக தகாத வார்த்தைகளால் பேசிய அந்தப் பெண், இளைஞரின் கைப்பேசியை பிடுங்கி வைத்துக் கொண்டார்.
பின்பு அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள் அந்த இளைஞரை தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்
அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு சென்ற அவர்கள் இவனை விடக்கூடாது என்று கூறிக் கொண்டே வாடா எங்க வீட்டுக்கு என்று அழைத்து சென்றனர்.
மேலும் சாலையின் நடுவே ஒரு இளைஞரை ஆபாச வார்த்தைகளால் பேசியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் ஒருபெண் சண்டையிட்டது அப்பகுதியில் சென்ற பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.