போக்வரத்து விதி மீறி நாங்கள் கனிமொழி எம்பியின் உதவியாளரின் தம்பி என போலீசாரை மிரட்டிய போதை இளைஞர்கள் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வாகன தனிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் தாறுமாறாக வந்த உயர் ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுபோதையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் நான் யார் தெரியுமா? நீ என்ன பெரிய ஆளா? என்று கேள்வி கேட்டு மதுபோதையில் அலப்பறையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அந்த நபரின் செல்போனை போலீசார் பறித்ததாக தெரிகிறது.இதில் ஆவேசம் அடைந்த அந்த போதை ஆசாமி தான் தி.மு.க எம்.பி. கனிமொழியின், உதவியாளரின் சகோதரர் என்று கூறி போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார்.
அவருடன் வந்த ஒருவர் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் வந்து அலப்பறையில் ஈடுபட்டு வந்தார்.
இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.குடிபோதையில் வாகனம் இயக்கி சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினரை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்க: சமந்தா விவாகரத்து குறித்து பற்ற வைத்த அமைச்சர்… திடீர் பல்டி : பரபரப்பு பேட்டி!
இந்நிலையில் போக்குவரத்து காவலர் கோவை காட்டூர் சட்டமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கிரண், பாலாஜி மற்றும் சிவானந்தம் ஆகிய பேரில் மூன்று பேர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் மீது போக்குவரத்துக் காவலரிடம் தகாத வார்த்தையால் மிரட்டியது பணி செய்யவிடாமல் தடுத்தது பொது இடத்தில் குடிபோதையில் ரகளை செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் நாங்கள் மது போதையில் இருந்ததால் காவல் துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறு ஈடுபட்டதாக கூறும் அவர் இதனால் காவலர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், மேலும் தி.மு.க எம்.பி கனிமொழி பி.ஏ யார் என்பது எனக்கு தெரியாது என்றும், பொது இடத்தில் அவர்கள் பெயரை பயன்படுத்தியது தவறு என்றும் தெரிந்தவரிடம் பேசுவதற்காக அவர் பெயரை பயன்படுத்தியதாக கூறியவர் அதற்கு மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.