Categories: தமிழகம்

திமுக வன்முறைக்கே பிறந்த கட்சி : ‘கோவில்களை காப்போம் கோவையை காப்போம்’ ஆர்ப்பாட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணிம் பேச்சு!!

கோவை : கோவில்களை காப்போம், கோவையை காப்போம் என்ற தலைப்பில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் விகேகே மேனன் சாலையில் “கோவில்களை காப்போம் கோவையை காப்போம்” என்ற தலைப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இந்துக்கோயில்கள் அதிகளவு அகற்றப்பட்டு வருவதாகவும், கோவையில் பல்வேறு இடங்களில் மத கலவரங்களை தூண்டும் வகையில் பல்வேறு அமைப்புகள் செயல்படுவதாகவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் எனவே கோவையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக இந்து முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் மாநில அமைப்பாளர் பக்தன் உட்பட கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோவில்களை காப்போம் காப்போம் என்ற முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் “ஜாதி ரீதியாக இந்துக்களை பிளவுபடுத்தும் சக்திகளை வேரெடுப்போம், பிஎஃப் மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளை தடைசெய், ஆன்மீக கோயில்களுக்கு முன்பு நாத்திக தலைவர்களின் சிலைகள் எதற்கு?” என்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கண்டன சிறப்புரையாற்றிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை உக்கடம் போன்ற பகுதிகளில் உள்ள நகைக்கடை வியாபாரிகள் இஸ்லாமிய அமைப்புகளை கண்டு பயந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தற்பொழுது இஸ்லாமிய அமைப்புகள் குரானை இந்துக்கள் மத்தியில் திணிப்பதாகவும் விமர்சித்தார். தற்பொழுது இந்து கோவில்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாக கூறி எடுத்து வருவதாக தெரிவித்த அவர் அதனை கண்டிக்கும் விதமாகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

திமுக வன்முறைக்கே பிறந்த கட்சி என விமர்சித்த அவர் தேச பக்தி உள்ளவர்களை இழிவுபடுத்துவது தான் இவர்களுக்கு வாடிக்கையான விஷயம் என தெரிவித்தார். அனைத்து கல்லூரிகளில் பின்னாலும் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் சிறந்த காவலர்களை நியமித்து கோவையும் கோவில்களையும் காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக மற்றும் திராவிட கழகங்கள் இதே நிலைமை தொடர்ந்தால் இந்து முன்னணி தொடர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்து கடவுள்கள் வேடமணிந்து சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…

51 minutes ago

நான் என்ன அடிமையா?- கமல்ஹாசன் செய்த அநியாயம்! ஓபனாக போட்டுடைத்த சந்தானம் பட நடிகர்…

கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…

52 minutes ago

பொதுவெளியில் விலகிய மேலாடை.. சங்கடத்தில் வனிதா : தீயாய் பரவும் போட்டோ!

பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…

1 hour ago

கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!

கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…

2 hours ago

நடிப்புக்கு டாட்டா காட்டும் ரஜினிகாந்த்? லதா ரஜினிகாந்த் சொன்ன தீடீர் தகவல்…

நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…

2 hours ago

This website uses cookies.