கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சார்பதிவாளர் தாணு மூர்த்தியின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி சார் பதிவாளராக தற்போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். 2018 – 2020 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தபோது, 15-12-2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி ரூபாய் 11,55,400/- பறிமுதல் செய்தனர்.
மேலும், அன்றைய தினம் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது 114 பவுன் தங்க நகையும் சிக்கியது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது நேற்று மாலை வழக்கு பதிவு செய்தனர். அவர் தற்போது தென்காசி மாவட்டத்தில் ஊத்து மலை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், அவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சைமன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததால் அவருடைய வீட்டிலும், திங்கள் நகர் பகுதியில் உள்ள அவருடைய மைத்துனர் ஸ்ரீ முருகா ஜுவல்லரி உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த, குமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்களுக்கு கிடைத்த தகவல்படி அவருடைய உத்தரவின் பேரில், இன்று குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் நாகர்கோவில் சைமன் நகர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
மேலும் லஞ்ச ஒழிப்பு பிரிவின் மற்றொரு காவல் ஆய்வாளர் தலைமையில் திங்கள் நகர் பகுதியில் உள்ள தாணுமூர்த்தி மனைவியின் சகோதரர் ஸ்ரீ முருகா ஜுவல்லரி உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனை முடிவில் தான் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்படுகிறது என்பதும், வருமானத்துக்கு அதிகமாக பினாமி பெயரில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பது குறித்து தெரியவரும் என்று கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.