கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சார்பதிவாளர் தாணு மூர்த்தியின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி சார் பதிவாளராக தற்போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். 2018 – 2020 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தபோது, 15-12-2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி ரூபாய் 11,55,400/- பறிமுதல் செய்தனர்.
மேலும், அன்றைய தினம் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது 114 பவுன் தங்க நகையும் சிக்கியது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது நேற்று மாலை வழக்கு பதிவு செய்தனர். அவர் தற்போது தென்காசி மாவட்டத்தில் ஊத்து மலை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், அவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சைமன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததால் அவருடைய வீட்டிலும், திங்கள் நகர் பகுதியில் உள்ள அவருடைய மைத்துனர் ஸ்ரீ முருகா ஜுவல்லரி உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த, குமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்களுக்கு கிடைத்த தகவல்படி அவருடைய உத்தரவின் பேரில், இன்று குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் நாகர்கோவில் சைமன் நகர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
மேலும் லஞ்ச ஒழிப்பு பிரிவின் மற்றொரு காவல் ஆய்வாளர் தலைமையில் திங்கள் நகர் பகுதியில் உள்ள தாணுமூர்த்தி மனைவியின் சகோதரர் ஸ்ரீ முருகா ஜுவல்லரி உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனை முடிவில் தான் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்படுகிறது என்பதும், வருமானத்துக்கு அதிகமாக பினாமி பெயரில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பது குறித்து தெரியவரும் என்று கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.