காஞ்சிபுரம் ; வரதராஜபுரம் அருகே “ரெப்கோ” வங்கியின் பெண் துணை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவருடைய மனைவி சாந்தா ஷீலா (35). இவர் கிண்டியில் உள்ள ரெப்கோ பேங்க் @பைனான்ஸ் கம்பெனியில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் இளவரசனின் அம்மா செல்லம்மாள் தங்கி உள்ளார்.
சாந்தா ஷீலாவுக்கும், மாமியார் செல்லம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாமியாருக்கும், மருமகளுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு சாந்தா ஷீலா, வெளியே வராததால் மாமியார் செல்லம்மா நீண்ட நேரம் பெட்ரூம் கதவை தட்டி உள்ளளார்.
சந்தேகம் அடைந்த செல்லம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெட்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, பெட்ரூமில் உள்ள ஃபேனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் சாந்தா ஷீலா இருந்துள்ளார்.
உடனே மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வங்கி துணை மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.