மாமியாருடன் தகராறு… வங்கி பெண் துணை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!!

Author: Babu Lakshmanan
8 October 2022, 9:52 am
Quick Share

காஞ்சிபுரம் ; வரதராஜபுரம் அருகே “ரெப்கோ” வங்கியின் பெண் துணை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவருடைய மனைவி சாந்தா ஷீலா (35). இவர் கிண்டியில் உள்ள ரெப்கோ பேங்க் @பைனான்ஸ் கம்பெனியில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் இளவரசனின் அம்மா செல்லம்மாள் தங்கி உள்ளார்.

சாந்தா ஷீலாவுக்கும், மாமியார் செல்லம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாமியாருக்கும், மருமகளுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு சாந்தா ஷீலா, வெளியே வராததால் மாமியார் செல்லம்மா நீண்ட நேரம் பெட்ரூம் கதவை தட்டி உள்ளளார்.

சந்தேகம் அடைந்த செல்லம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெட்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, பெட்ரூமில் உள்ள ஃபேனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் சாந்தா ஷீலா இருந்துள்ளார்.

உடனே மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வங்கி துணை மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 353

0

0