காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள 6 குளிர்சாதனப் பெட்டிகளும் பழுதடைந்து, சடலங்கள் அழுகி சுகாதாரக் கேடு ஏற்படும் அவலம் உருவாகியுள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் என ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 200 கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்கொலைகள் செய்து கொண்டவர்களின் சடலங்களும், சென்னை , பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி ,செங்கல்பட்டு மார்கங்களில் தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 சடலங்களுக்கு மேல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளும் கடந்த ஒரு வார காலமாக பழுதடைந்து, அதில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அனைத்தும் அழுகி துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்த சடலங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகிறது.
அரசு தலைமை மருத்துவமனையிலேயே குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைந்து, அதை ஒரு வார காலமாக சீர்படுத்த முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடித்து நோயாளிகளையும், உறவினர்களையும் அங்கேயும், இங்கேயும் என அலைய விடுகிறது.
விபத்துகளிலும், தற்கொலைகளிலும் இறந்து போனவர்களின் சடலங்களைக் வைத்து கொண்டு கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ள உறவினர்களை, செங்கல்பட்டுக்கும் ஸ்ரீபெரும்புதூக்கும் அலய விடுவது எந்த விதத்தில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.