கன்னியாகுமரி: குறும்பனையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் கடல் சீற்றத்தால் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ததேயூஷ் மகஷ். இவர் பைபர் படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இன்று அதிகாலை வழக்கம் போல் யூஜின் என்பவரின் பைபர் படகில் 5 மீனவர்களாக குறும்பனை கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால், பைபர் படகில் இருந்த ததேயூஷ் மகேஷ் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில், படகும் அவர் மீது மோதியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த மகேஷ் கடலில் மூழ்கவே சக மீனவர்கள் அவரை உடனடியாக மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து குளச்சல் கடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.