கரூரில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, வாங்கல் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை மரம் பயிரிட்டுள்ளார். அதில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்த 2500 வாழைமரங்கள் பாதியோடு முறிந்து விழுந்தது.
இன்னும் ஒரு மாத காலத்தில் வாழைதார் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் தாருடன் வாழை மரம் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பலரும் வாழை விவசாயத்தை கைவிட்ட நிலையில், ஒரு சில விவசாயிகள் மட்டும் இப்பகுதியில் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அவர்கள் கூறியதாவது :- உரம், யூரியா விலையை குறைக்க வேண்டும். உரம் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை விவசாயத்திற்கு ஈடுபடுத்த வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடி வரும் சூழ்நிலையில், அதற்கு காரணம் அந்த அரசாங்கம் திடீரென்று இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதுதான்.
உரம், யூரியா போன்ற பொருட்களை இறக்குமதி செய்தால், அந்நியச் செலாவணி போய்விடும் என்பதால் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். திடீரென்று இயற்கை விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில், உணவு பற்றாக்குறை தற்பொழுது இலங்கை நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு, மாநில அரசு உரம் விலை ஏற்றம் ஆள் பற்றாக்குறை இயற்கை பாதிப்பு இதே போன்ற சூழ்நிலை விவசாயத்தை புறக்கணித்தால் உணவுப் பஞ்சம் இங்கும் ஏற்படும் என்று அப்பொழுது தெரிவித்தார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.