கரூர் அருகே முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது லாரியின் சக்கரத்திற்குள் சிக்கி மாமியார், மருமகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள தனியார் கிரானைட் கல் குவாரியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தோகைமலையிலிருந்து பாளையம் வழியாக தாந்தோன்றிமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. வெள்ளியணையை அடுத்த பச்சபட்டி அருகே வந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டனர்.
அப்போது லாரியின் பின்பக்க சக்கரத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடலை மீட்ட வெள்ளியணை காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் கனகராஜ் என்றும், அவர் கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததும், அவருடன் வந்தவர் அவரது மாமியார் சுசீலா என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பழைய சுக்காம்பட்டியை சார்ந்த கண்ணன் என்பவர் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு லாரியை ஓட்டிச் சென்று ஆஜராகினார். அவரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.