கரூரில் நவீன தானியங்கி கேமராவில் பதிவான வாகனத்திற்கு பதிலாக மற்றொரு வாகனத்திற்கு தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணியில் போக்குவரத்து காவலர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் பேருந்து நிலைய ரவுண்டானா, சர்ச் கார்னர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டன.
இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதில், அண்மைக்காலமாக கேமராவில் பதிவாகும் வாகனங்களுக்கு பதிலாக, வேறு வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில், சர்ச் கார்னர் பகுதியில் TN 47 BB 5326 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி தலைக்கவசம் அணியாமல் சென்ற விதிமீறலுக்காக, TN 47 BB 5376 என்ற பதிவு எண் கொண்ட மற்றொரு வாகன உரிமையாளருக்கு தவறாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.