Categories: தமிழகம்

விரைவில் புதுப்பொலிவுடன் குமரி திருவள்ளுவர் சிலை : ரூ.1 கோடி செலவில் ரசாயண கலவை பூச்ச திட்டம்!!

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையின் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த சிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனாபரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தி.மு..க அரசு பதவியேற்றதும் இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு உள்ள இந்த  பணிக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழு நேற்று கன்னியாகுமரி வந்தது. 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி தலைமையில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையாளர் டாக்டர். சிவானந்தம், மத்திய எலக்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர்.சரஸ்வதி, தொல்லியல்துறை உதவி கண்காணிப்பு வேதியல் நிபுணர் புருஷோத்தம ராஜ், திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ் ஆகியோர் கன்னியாகுமரி வந்தனர். 

அவர்களை சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாடு முதுநிலை மேலாளர் யுவராஜ், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், ஸ்ரீனிவாசன், கன்னியாகுமரி சுற்றுலா அலுவலர் சீதாராமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் உயர்மட்ட குழு தனிப்படகில் திருவள்ளுவர் சிலை சென்றது. 

அவர்கள் சுமார் 2 மணி நேரம் சிலையின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டல் தமிழ்நாடு கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தினர். ரூ.1 கோடி திட்ட மதிப்பில் நடைபெற உள்ள ரசாயன பூசும் பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கி 3 மாதங்களுக்குள் பணி முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

12 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

13 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

14 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

15 hours ago

This website uses cookies.