குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் குண்டாஸ் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை!!
மன்னார்குடியில் குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பூக்கொல்லை தெருவை சேர்ந்த சதீஷ்குமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளை வட மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் வருகிறது என்கிற போலி தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில் எந்த மாவட்டத்திலும் குழந்தைகள் கடத்தப்பட்டதற்கான உண்மையான செய்திகள் இல்லை சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இது மாதிரியான தகவல்களை பொதுமக்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக கூறிக் கொள்கிறோம். வதந்திகளை பரப்ப வேண்டாம் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல்களை கூறி அதனை விசாரித்துக் கொள்ளுங்கள்.
சமூக வளைதளத்தில் மீது அவதூறு பரப்புவோர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மன்னார்குடியில் அடிதடியில் ஈடுபட்ட வீடியோவை குழந்தை கடத்துபவர்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட மன்னார்குடி நகராட்சியில் டிராக்டர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் பூக்கொல்லைத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் அஸ்வத் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
இந்த தகவல் முற்றிலும் பொய்யானது.வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் குழந்தைகளை கடத்துபவர்கள் என பரப்புவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி கடுமையாக எச்சரித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.